Thursday, June 5, 2008

மெல்லத் திறந்தது (காதல்) கனவு !!!

#
நீ பிரிந்த நொடிகளில்
ஒட்டிக்கொள்கின்றன
உன் நினைவுகள் !
#
I Love U வென குறுந்தகவலுனுப்பிவிட்டு
பெருமூச்சு விடுகிறேன்
காதலை பிரசவித்த சுகத்தில் !
#
இதயத்தில் நீ குடிவந்த பிறகு
நொடிக்கொருமுறை சரிபார்த்துக்கொள்கிறேன்
துடிப்பை. !
#
நீ நகம் கடிக்கையிலும்வெட்கத்தில்
முகம் சிவக்கையிலும்உன்னிடம்
புதிதாய் சிறைபடுகிறது மனது !
#
கொள்கையோடு வாழ்ந்த மனது உன்னிடம்
கொள்ளை போன பொழுதை தேடி
தூங்காமலே துறக்கின்றது இரவுகளை !
#
உறங்கி முடித்ததொரு
வெள்ளை இரவில்மெல்லச்சாய்கிறேன்
கள்ளிஉன் நினைவுகளுடன்.....!
பேரன்புடன்
மீறான் அன்வர்

8 comments:

கோகுலன் said...

//I Love U வென குறுந்தகவலுனுப்பிவிட்டுபெருமூச்சு விடுகிறேன்காதலை பிரசவித்த சுகத்தில் //

சூப்பரு மக்கா.

இதயத்தில் நீ குடிவந்த பிறகு நொடிக்கொருமுறை சரிபார்த்துக்கொள்கிறேன்துடிப்பை. !

அட அட..

நீ நகம் கடிக்கையிலும்வெட்கத்தில் முகம் சிவக்கையிலும்உன்னிடம் புதிதாய் சிறைபடுகிறது மனது !

#கொள்கையோடு வாழ்ந்த மனது உன்னிடம் கொள்ளை போன பொழுதை தேடிதூங்காமலே துறக்கின்றது இரவுகளை !

நல்லாருக்கு மக்கா..

இவங்க அவங்களா? இல்ல புதுசா யாருமா?

மீறான் அன்வர் said...

நன்றி மக்கா

ஆரம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு பினீசிங் சரியில்லயப்பா :))

//இவங்க அவங்களா? இல்ல புதுசா யாருமா?//


ஏனிந்த கொலை வெறீறீறீ :-))

இவன் said...

//I Love U வென குறுந்தகவலுனுப்பிவிட்டு
பெருமூச்சு விடுகிறேன்
காதலை பிரசவித்த சுகத்தில் ! //

இந்த வரியை ரசித்தேன் அன்வர். அழகான கவிதை

மீறான் அன்வர் said...

//இந்த வரியை ரசித்தேன் அன்வர். அழகான கவிதை //

நன்றி இவண் வருகைக்கும் ரசிப்புக்கும் பொய் எப்போதுமே அழகாத்தான் இருக்கு !

நீங்க அவன் இல்லதான :)(சும்மா டமாசுக்கு )

Natchathraa said...

//#நீ நகம் கடிக்கையிலும்வெட்கத்தில் முகம் சிவக்கையிலும்உன்னிடம் புதிதாய் சிறைபடுகிறது மனது !//

மீறான் யாரிந்த தேவதை???
இதெல்லாம் கற்பனை மாதிரீ தெரியலியே பயலே.....
எங்கனையாவது மாட்டிகிட்டயா????
:) :) :)

அன்புடன்

நட்சத்திரா

மீறான் அன்வர் said...

//மீறான் யாரிந்த தேவதை???
இதெல்லாம் கற்பனை மாதிரீ தெரியலியே பயலே.....
எங்கனையாவது மாட்டிகிட்டயா???? //

யக்கோவ் ஏன் இப்படியெல்லாம் இந்த பச்சமண்ண இந்த பாடு படுத்துறீங்க நானும் எம்புட்டு நாளைக்கு இதெல்லாம் நெஞம்னு நடிக்கிறது :)

நிவேதிதா தேவி said...

கவிதையெல்லாம் ரொம்ப நல்ல இருகண்ணே :) :) :) நடிக்கறவங்க எழுதின மாதிரி இல்ல எ

மீறான் அன்வர் said...

//கவிதையெல்லாம் ரொம்ப நல்ல இருகண்ணே :) :) :) நடிக்கறவங்க எழுதின மாதிரி இல்ல எ//


அக்காதான் அப்படின்னா தங்கச்சி நீயுமா என்ன கொடுமை சார் இது :)

வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி தேவி