Friday, August 14, 2009

தயவு செய்து இத படிக்காதீங்க

ஆணாதிக்கம், ஆவன்னா தித்திக்கும், பெண்ணீயம், பெருங்காயம், காதல், கத்தரிக்காய், கவிதை, கவுஜ, கவிக்கோ, கலீல்கிப்ரான், ஆணி, ஆவனி, தாவணி, இயற்கை, தென்காசி, சம்பன்குளம், குற்றாலம், அருவி குளியல், கேரளா இப்படி என்னவெல்லாமோ எழுதலாம்னு வந்தேன் !

சட்டென எங்கிருந்தோ வந்த ஒரு அசட்டு சோம்பேறித்தனம் அதை நாளைக்கு தள்ளிபோட்டுவிட்டது.

அது எந்த நாளை என்பது நிச்சயமாக நீங்கள் யாவரும் அறியாதது, நானும்தான் ! (பின்னே இத எழுதனும்னு நெனச்சே நாலுநாளு ஆச்சு:)

யான் வர்ட்டே
பேரன்புடன் - பாசக்கார பய

Thursday, June 25, 2009

பத்தோட முப்பத்திரெண்டு

என்னையும் ஒரு பதிவரா மதிச்சு தொடர் பதிவிற்கு அழைத்த சேக்காளி கோகுலனுக்கு மிக்க நன்றி, நல்லா இரு மக்கா..

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

வூட்ல வச்ச பெயர் முஹமது மீறான் அன்வர், முஹமது பொதுப்பெயரா இருக்க மீறான்(மீறாப்பிள்ளை) தாத்தாபெயரா இருக்க வீட்ல எல்லாரும் அன்வர்னுதான் கூப்பிடுவாக, அப்புறம் பள்ளி கல்லூரில எல்லா பயபுள்ளைகளும் மீறான்னே கூப்பிட ரெண்டையும் சேர்த்து மீறான் அன்வர்னு மட்டும் நான் வச்சிக்கிட்டேன்.

ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

சரியா பதினோரு மாசத்துக்கு முன்னாடி சாத்தனூர் அணைக்கட்டுக்கு அலுவக சுற்றுலா போயிருந்தோம், போகும் போது வாகனத்துல சந்தோஷ் சுப்ரமணியம் படம் போட்டானுவ, அதுல ஒரு காட்சியில நம்ம நாயகன் செயம் ரவி சொல்லுவாரு "உங்களுக்கு தெரியாமலே உங்க கைக்குள்ள இருந்து என் கைய எடுத்துடலாம்னு பார்த்தேன்பா ஆனா இப்பகூட என் கை உங்க கைக்குள்ளதான்ப்பா இருக்குன்னுட்டு" ங்கொய்யால சத்தியமா அப்ப வந்த அழுகைய அடக்கவே முடியல அழுது தொலைச்சிட்டேன் :(

சமீபத்துல மிக நெருங்கிய உறவினர் மரணத்திற்கு சென்றிருந்த போது எம்புட்டு முயன்றும் அழுகை வரமாட்டேன்னு அடம்பிடிச்சிடுத்து, முகத்த மட்டும் சோகமா வச்சிக்கிட்டு ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்.


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சல்லவா ரொம்பவே பிடிக்கும், அதுலயும் என் பெயர நானே அடிக்கடி எழுதி அழகுபார்ப்பதுண்டு :)

4.பிடித்த மதிய உணவு என்ன?

இன்னதுன்னெல்லாம் கிடையாது என்ன சாப்பாடு இருக்கோ ச்கட்டுமேனிக்கு (அளவோடு) மேஞ்சுவேன் !


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நேர்லயா இணையத்துலயான்னு கேட்கலியே :(

நமக்கு பிடிச்சிருக்கா கற்பூரம்தான் கப்புனு புடிச்சிக்குவேன்,


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?


மொதல்ல ஆத்துல நீச்சல்டிச்சு அதுவும் முங்கு நீச்சல் ! அப்புறம் அருவில நாள் முளுசுக்கும் கிடப்பேன், கடலிலும் குளிச்சிருக்கேன் கடலும் அதன் அலையும் பிடிக்கும் :)

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

மொதல்ல கண் பின் முகம், முக்கியமா புன்னகை

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

எண்ணையே ரொம்ப பிடிக்கும் தனித்தனியா பிரிக்கவிரும்பல :)

பிடிக்காதது : சோம்பல்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஐயம் வெரி சாரி இப்ப வரைக்கும் ஒரு சாரி கட்டின தேவதையும் கிடைக்காததால் சரி பாதியும் தப்பு பாதியும் நாந்தேன் ஆக முந்தின கேள்விக்கான பதில இன்னோரு தபா படிச்சிக்கோங்க.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

யாராவது இருந்தாதான் வருத்தப்படனும் :) (அப்படியார் இருந்தாலும் பாவம் அவங்க ! )

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

முழுசா கருநீலத்திலான அறைக்கை சட்டை அடர் பச்சை நிற கால்சட்டை

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

கப் ஆப் லைப்னு கப்ஸா வுட ஆசதான் இருந்தாலும் கேட்டிட்டிருக்குறது "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு"

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

யார் மாத்துறாங்களோ அவங்க விருப்பத்துக்கு மாத்திட்டு போகட்டும்

14.பிடித்த மணம்?

ஒன்னா ரெண்டா என்னத்த சொல்ல இந்த பதிவு போதாது இருந்தாலும் ஒன்னு ரெண்டு சொல்லிக்கிறேன், சாரல் நனைத்த மண்வாசனை, அம்மாவின் சமையல் மணம், மல்லிகைப்பூ மணம், காட்டுத்தேன் மகரந்த தூளோடு கூடிய மணம், ஒவ்வொரு பூவின் மணமும், வெங்காயம் தாளிக்கும் மணம், சுண்டிப்போன பாலின் மணம், நெய் மணம், எலுமிச்சை இலை முறித்து அதில் வரும் மணம், நறுமணம்.... இன்னும்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
நமக்கு தெரிஞ்ச பயபுள்ளைக எல்லாருமே பதில சொல்லிப்புட்டானுவ, என் சுற்ற என்னோட முடிச்சுக்குறேன்.
யாருமே இல்லாத டீக்கடையில யாருக்கு டீ ஆத்த சொல்லுதிய :)என்ன கேள்வி கேக்க ஆளே இல்லியான்னு யாராச்சும் லேசான சோகத்துல இருந்தீங்கன்னா இந்த கேள்விக்கான பதில அவங்களுக்கு அற்பணிக்கிறேன்.... ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணகட்டுதே

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

பதிவுகள் அவ்வளவா படிக்கிறதில்லன்னாலும் குழுமங்களில் கோகுலனின் கவிதைகளை அதிகம் படித்திருக்கிறேன் முக்கியமாக அம்மாவைப்பற்றி, காதல் கவிதைகள்னு சன்னமா தெறிக்கவிட்வாரு மனுசன் :).

17. பிடித்த விளையாட்டு?

கில்லி, உள்ளங்கையில்(மட்டும்) பம்பரம் விடுவது, கோலி, ஆற்றில் குளிக்கும் போது தொட்டு பிடிச்சு விளையாடுவது இப்படி விளையாட பிடிக்கும் பார்ப்பதற்கு மட்டைப்பந்து, கால்ப்பந்து !

18.கண்ணாடி அணிபவரா?

சத்தியமா இல்ல

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

அதிகமா விரும்பி பார்க்கிறதில்லை, (எப்படிப்பட்ட படம் பிடிக்காதுன்னு கேட்டிருக்கலாம் :)

20.கடைசியாகப் பார்த்த படம்?

திரையரங்கில் போயி முழுசா பார்த்த படம் "யாவரும் நலம்" அனுபவிச்சு பார்த்தேன் நல்லாதான் இருந்தது வழக்கமான ஓட்டைகளுக்கு பஞ்சம் இல்ல !

21.பிடித்த பருவ காலம் எது?

சிறு பருவமா இருந்த காலம் தான், மத்தபடி சாரலடிக்கும் எந்த காலமும் !

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் !

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ஒரு காலத்துல 15 நிமிடத்திற்கு அதுவா மாறுகின்றமாதிரி உள்ள மென் பொருளை நிருவியிருந்தேன், இப்போதைக்கு மாற்றி வருசக்கணக்காவுது

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?


பிடித்த சத்தம் குழந்தையின் சிரிப்பு சப்தம், அழகான சிரிப்பு (குமரிமுத்து மாதிரி இல்ல ), காட்டு வண்டுகளின் ரீங்காரம், ஹோவென விழும் அருவியின் சப்தம், சலசலக்கும் ஓடை நீர் சப்தம், தொழுகை அழைப்பு ஓசை, (ஞாபகம் வச்சுக்கோங்க இசையை இதுல சேர்க்கல).

பிடிக்காதது : அழுகிறேன்னு ஓவென ஒப்பாரி வைக்கிறது, கோபத்தில் கத்துறது, காதைக்கிளிக்கும் ஒலிப்பான், வாகன இரைச்சல்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?


சின்ன புள்ளையில விசாகப்பட்டிணம் வரை, சமீபமா கர்நாடகா ஹூப்லி (தார்வாட்) வரை ரெண்டுல எது தூரம்னு தெரியாது :(

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எதுலயும் நோண்டி நொங்கெடுக்க நினைப்பது, தெரியலன்னு சொல்லத்தெரியாதது :) உபயம் கூகுள் :))

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அப்படியெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல :)

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

நானே ஒரு குட்டிச்சாத்தான்னு நாலுபேரு சொல்லுவானுவ இதுல எனக்குள்ளயே ஒரு சாத்தானா ? அது ஒரு ஓரமா தூங்கிட்டு இருக்கட்டும் இப்போதைக்கு இந்த குட்டிச்சாத்தானே போதும் :) அதெல்லாம் இருக்கட்டும் கேட்ட கேள்விக்கு பதில எங்கடேன்னு கேட்டியனா அது சோம்பலாத்தான் இருக்கும் :(

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

எங்க ஊர்(கடனாநதி அணைக்கட்டும் அதைச்சார்ந்த காட்டுப்பகுதிகளும்), (சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போலாகுமா ??) ம் அப்புறமா சமீபமா சென்று வந்த கொடைக்கானல்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படித்தான் இருக்கக்கூடாதுன்னு ! (கட்டற்ற சுதந்திரமா!! ) கோட்டிக்காரப்பயலுவ எங்க இருக்கவுடுதானுவ :(

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?

இப்பவரைக்கும் செய்ற எல்லாமே :)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
செத்துபோனவன்கிட்ட கேட்டாலும் அதத்தான் தேடிட்டிருக்கேன்பான் :), எனக்கு இன்னும் அனுபவம் பத்தாது இதுக்கு பதில் சொல்ல :)

அனுபவிங்கப்பூ ஆராயாதீக !

ஒரு வழியா முடிச்சிட்டேன் :)
வர்ட்டே

பேரன்புடன்

பாசக்கார பய

Sunday, April 12, 2009

Saturday, January 24, 2009

டிங் டிங்.. டிங் டிங்.. SMS

காலையில எந்திரிச்சவுடனே சூரியன் கதவ தட்டுது மலர்கள் காத்திருக்குன்னு ஒரு காலை வணக்கம்.

அப்புறமா இந்தநாள் இனியநாள் தினம் ஒரு தெருக்குரல்ன்னு ஒரு மொக்க வசனம்..

சாப்டாச்சா என்ன சாப்பாடுன்னு ஒரு மதிய வணக்கம். ஆணிபுடுங்குற இடத்துல தூங்கி எந்திருச்சி ஒரு மாலை வணக்கம்.

தூங்கலாம்னு போனா கண்ணகட்டுது, நிலவு தாலாட்டுதுன்னு இரவு வணக்கம்.

இதுக்கு இடையிடையே இவிங்க பன்ற அட்டூளியத்த சர்தார்மேல பழிய போட்டு அவர வம்புக்கு இழுக்குறது. இவங்க் போதைக்கு ஊறுகாயா விஜய்யையும் காந்தையும் தொட்டுக்குறது.

அப்புறம் இத பத்துபேருக்கு அனுப்பு இல்லாட்டி சாமி கண்ணகுத்திரும், தண்ணிலாரிமோதி சாவ அப்படின்னு மிரட்டல் வேற..

ஓசில குறுந்தகவல் இருக்குறவரைக்கும் இவிங்கலெயெல்லாம் திருத்தமுடியாது திருத்தவேமுடியாதுடியோவ் :) (அதான இவிங்க என்ன தேர்வுத்தாளா திருத்துறதுக்குன்னு கேட்காதீங்க)

ஆனாலும் அவசர உதவிக்கு இரத்த தேவைக்கு, விளிப்புணர்வுக்கு, ஆன்மீக செய்திக்குன்னு போர் அடிக்கும்போதெல்லாம் மாறிக்குறாங்க இவங்க உண்மையிலயே ரொம்ப நல்லவங்கப்பா

(அமெரிக்காவுல ஒரு சின்ன பொண்ணு ஒரே மாசத்துல 52000 குறுந்தகவல் அனுப்பியிருக்காமாம். சராசரியா ஒரு நாளைக்கு 1733 (கண்ணகட்டுதுடா சாமி).

ரொம்ப நாளைக்கு அப்பறம் இப்படியாவது ஒரு பதிவு போடமுடிஞ்சுதே ஹப்பாடா :)

பேரன்புடன்
மீறான் அன்வர்