#
நீ பிரிந்த நொடிகளில்
ஒட்டிக்கொள்கின்றன
உன் நினைவுகள் !
#
I Love U வென குறுந்தகவலுனுப்பிவிட்டு
பெருமூச்சு விடுகிறேன்
காதலை பிரசவித்த சுகத்தில் !
#
இதயத்தில் நீ குடிவந்த பிறகு
நொடிக்கொருமுறை சரிபார்த்துக்கொள்கிறேன்
துடிப்பை. !
#
நீ நகம் கடிக்கையிலும்வெட்கத்தில்
முகம் சிவக்கையிலும்உன்னிடம்
புதிதாய் சிறைபடுகிறது மனது !
#
கொள்கையோடு வாழ்ந்த மனது உன்னிடம்
கொள்ளை போன பொழுதை தேடி
தூங்காமலே துறக்கின்றது இரவுகளை !
#
உறங்கி முடித்ததொரு
வெள்ளை இரவில்மெல்லச்சாய்கிறேன்
கள்ளிஉன் நினைவுகளுடன்.....!
பேரன்புடன்
மீறான் அன்வர்
8 comments:
//I Love U வென குறுந்தகவலுனுப்பிவிட்டுபெருமூச்சு விடுகிறேன்காதலை பிரசவித்த சுகத்தில் //
சூப்பரு மக்கா.
இதயத்தில் நீ குடிவந்த பிறகு நொடிக்கொருமுறை சரிபார்த்துக்கொள்கிறேன்துடிப்பை. !
அட அட..
நீ நகம் கடிக்கையிலும்வெட்கத்தில் முகம் சிவக்கையிலும்உன்னிடம் புதிதாய் சிறைபடுகிறது மனது !
#கொள்கையோடு வாழ்ந்த மனது உன்னிடம் கொள்ளை போன பொழுதை தேடிதூங்காமலே துறக்கின்றது இரவுகளை !
நல்லாருக்கு மக்கா..
இவங்க அவங்களா? இல்ல புதுசா யாருமா?
நன்றி மக்கா
ஆரம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு பினீசிங் சரியில்லயப்பா :))
//இவங்க அவங்களா? இல்ல புதுசா யாருமா?//
ஏனிந்த கொலை வெறீறீறீ :-))
//I Love U வென குறுந்தகவலுனுப்பிவிட்டு
பெருமூச்சு விடுகிறேன்
காதலை பிரசவித்த சுகத்தில் ! //
இந்த வரியை ரசித்தேன் அன்வர். அழகான கவிதை
//இந்த வரியை ரசித்தேன் அன்வர். அழகான கவிதை //
நன்றி இவண் வருகைக்கும் ரசிப்புக்கும் பொய் எப்போதுமே அழகாத்தான் இருக்கு !
நீங்க அவன் இல்லதான :)(சும்மா டமாசுக்கு )
//#நீ நகம் கடிக்கையிலும்வெட்கத்தில் முகம் சிவக்கையிலும்உன்னிடம் புதிதாய் சிறைபடுகிறது மனது !//
மீறான் யாரிந்த தேவதை???
இதெல்லாம் கற்பனை மாதிரீ தெரியலியே பயலே.....
எங்கனையாவது மாட்டிகிட்டயா????
:) :) :)
அன்புடன்
நட்சத்திரா
//மீறான் யாரிந்த தேவதை???
இதெல்லாம் கற்பனை மாதிரீ தெரியலியே பயலே.....
எங்கனையாவது மாட்டிகிட்டயா???? //
யக்கோவ் ஏன் இப்படியெல்லாம் இந்த பச்சமண்ண இந்த பாடு படுத்துறீங்க நானும் எம்புட்டு நாளைக்கு இதெல்லாம் நெஞம்னு நடிக்கிறது :)
கவிதையெல்லாம் ரொம்ப நல்ல இருகண்ணே :) :) :) நடிக்கறவங்க எழுதின மாதிரி இல்ல எ
//கவிதையெல்லாம் ரொம்ப நல்ல இருகண்ணே :) :) :) நடிக்கறவங்க எழுதின மாதிரி இல்ல எ//
அக்காதான் அப்படின்னா தங்கச்சி நீயுமா என்ன கொடுமை சார் இது :)
வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி தேவி
Post a Comment