Wednesday, May 16, 2007

பொழுதுபோக்காக......

இருட்டில் ஒரு வெளிச்சம் !


Tuesday, May 1, 2007

இயற்கையின் குழந்தை - கடனாநதி

கடனா நதி அனைக்கட்டு

சொர்க்கமே என்றாலும் அது எங்க ஊர போலாகுமா !



நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் கடையம் ஒன்றியத்தில் மேற்குதொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் இந்த கடனா நதி அணைக்கட்டு நெல்லைமாவட்டத்தில் பாபநாசம், காரையார், மணிமுத்தாறு அணைக்கட்டுகளுக்கு அடுத்த பெரிய அணைக்கட்டு இதுவாகும்.






அகத்திய மலைக்கும்(பாபநாசம்) குறவஞ்சி(குற்றாலம்) மலைக்கும் நடுவில் அமைந்திருக்கும் இந்த அணைக்கட்டிற்கு தோணியாறு(பனிச்சி), கல்லாறு(பாம்பாறு, நெடும்பாறை) என்ற இரு நீர்வீழ்ச்சிகள் வழியாக நீர் கிடைக்கிறது.


85 அடிகள் கொண்ட இந்த அணைக்கட்டு தற்போது பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது, ஏழு மதகுகளைக்கொண்டது. சுற்றுவட்டார விளைநிலங்களுக்கு முக்கிய நீர் ஆதரமாக இந்த அணைக்கட்டு உள்ளது. தமிழக முதல்வர் திரு மு. கருணாநிதி அவர்களால் 1969 ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.


அம்பாசமுத்திரம் - தென்காசி சாலையில் ஆழ்வார்குறிச்சியிலிருந்து உள்ளே சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. அணைக்கட்டின் அடிவாரத்தில் தொடக்கத்தில் கட்டப்பட்ட பூங்கா சீரமைப்பின்றி பொலிவின்றி இருக்கிறது. இப்பூங்கா சீரமைக்கப்படும் பட்சத்தில் சிறந்த சுற்றுலாத்தளமாக இருக்கும்.


இது வெளி அமைப்பு மட்டுமே உள்ளே அருவிகளுடன் நதிகளுடன் எடுக்கப்பட்ட நிழற்படங்களுடன் விரைவில் வருகிறேன்.

சம்பன்குளத்தான்
மீறான் அன்வர்