Saturday, January 24, 2009

டிங் டிங்.. டிங் டிங்.. SMS

காலையில எந்திரிச்சவுடனே சூரியன் கதவ தட்டுது மலர்கள் காத்திருக்குன்னு ஒரு காலை வணக்கம்.

அப்புறமா இந்தநாள் இனியநாள் தினம் ஒரு தெருக்குரல்ன்னு ஒரு மொக்க வசனம்..

சாப்டாச்சா என்ன சாப்பாடுன்னு ஒரு மதிய வணக்கம். ஆணிபுடுங்குற இடத்துல தூங்கி எந்திருச்சி ஒரு மாலை வணக்கம்.

தூங்கலாம்னு போனா கண்ணகட்டுது, நிலவு தாலாட்டுதுன்னு இரவு வணக்கம்.

இதுக்கு இடையிடையே இவிங்க பன்ற அட்டூளியத்த சர்தார்மேல பழிய போட்டு அவர வம்புக்கு இழுக்குறது. இவங்க் போதைக்கு ஊறுகாயா விஜய்யையும் காந்தையும் தொட்டுக்குறது.

அப்புறம் இத பத்துபேருக்கு அனுப்பு இல்லாட்டி சாமி கண்ணகுத்திரும், தண்ணிலாரிமோதி சாவ அப்படின்னு மிரட்டல் வேற..

ஓசில குறுந்தகவல் இருக்குறவரைக்கும் இவிங்கலெயெல்லாம் திருத்தமுடியாது திருத்தவேமுடியாதுடியோவ் :) (அதான இவிங்க என்ன தேர்வுத்தாளா திருத்துறதுக்குன்னு கேட்காதீங்க)

ஆனாலும் அவசர உதவிக்கு இரத்த தேவைக்கு, விளிப்புணர்வுக்கு, ஆன்மீக செய்திக்குன்னு போர் அடிக்கும்போதெல்லாம் மாறிக்குறாங்க இவங்க உண்மையிலயே ரொம்ப நல்லவங்கப்பா

(அமெரிக்காவுல ஒரு சின்ன பொண்ணு ஒரே மாசத்துல 52000 குறுந்தகவல் அனுப்பியிருக்காமாம். சராசரியா ஒரு நாளைக்கு 1733 (கண்ணகட்டுதுடா சாமி).

ரொம்ப நாளைக்கு அப்பறம் இப்படியாவது ஒரு பதிவு போடமுடிஞ்சுதே ஹப்பாடா :)

பேரன்புடன்
மீறான் அன்வர்

No comments: