Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Thursday, June 5, 2008

மெல்லத் திறந்தது (காதல்) கனவு !!!

#
நீ பிரிந்த நொடிகளில்
ஒட்டிக்கொள்கின்றன
உன் நினைவுகள் !
#
I Love U வென குறுந்தகவலுனுப்பிவிட்டு
பெருமூச்சு விடுகிறேன்
காதலை பிரசவித்த சுகத்தில் !
#
இதயத்தில் நீ குடிவந்த பிறகு
நொடிக்கொருமுறை சரிபார்த்துக்கொள்கிறேன்
துடிப்பை. !
#
நீ நகம் கடிக்கையிலும்வெட்கத்தில்
முகம் சிவக்கையிலும்உன்னிடம்
புதிதாய் சிறைபடுகிறது மனது !
#
கொள்கையோடு வாழ்ந்த மனது உன்னிடம்
கொள்ளை போன பொழுதை தேடி
தூங்காமலே துறக்கின்றது இரவுகளை !
#
உறங்கி முடித்ததொரு
வெள்ளை இரவில்மெல்லச்சாய்கிறேன்
கள்ளிஉன் நினைவுகளுடன்.....!
பேரன்புடன்
மீறான் அன்வர்

Saturday, December 1, 2007

சுகமான சோகம்

சொற்களால் முள்ளை
நீ தைத்தபோதெல்லாம்
வலிக்கவில்லை.

மறந்துவிடு என்றபோது
மரத்தேவிட்டது என் மனது

மறந்துதான் போகிறேன் என்னை
உன்னையும் நம் காதலையும்
நினைக்கும்போதெல்லாம்

அட்லாண்டிக் கடலின்
ஆழமென்ன பெண்ணே
உன் ஓரங்குல மனதிற்குமுன்..

உன் நினைவுகளுடன்
கண்மூடித்தனமாக எரியும்
காட்டுத்தீயாய் என் சோகம்

கண்ணாமூச்சி ஆடுகிறாய்
என் பெயருடனான
உன் மழலையோடு.

மனதில் நினைத்த
கனவுகளெல்லாம்
மழையில் கரைகின்றன
மேகங்களாக !

உன் கண்காணா இடம்
தேடி செல்கிறேன்
என்னை நினைக்க.......