தொலைத்த நிஜங்களை நிழலில் தேடுகிறேன்
இயற்கையின் பேரழகை
இமைக்காமல் ரசித்த நாட்களை
பார்வையில்கூட கேள்வியையுடன்
பார்க்கும் மழலைகளுடன் மகிழ்ந்த நாட்களை
மழையில் கைநனைத்து
மழலையான நாட்களை
சில்லென சிலிர்க்க வைக்கும்
மலைச்சாரலில் உடல்நனைத்த நாட்களை
பழய கஞ்சியுடன் உரித்த வெங்காயத்தை
மனது நிறைந்த நிம்மதியோடு
வயிறு நிறைத்த நாட்களை
அருவிக்குலியலில் ஆயுளைக்களிக்க......
நினைத்த நாட்களை
ஜன்னலோர பயணத்தில்
தொலைத்த அந்த உலகத்தை
ஜன்னல் உலகில் தேடுகிறேன்,
முகம் தெரியாத நட்புகள்,
உதடு தெரியாத புன்னகைகள்.
நிஜமான நிழலுலகம் இது.
நேரில் எதிர்நோக்கும்
எத்தனையோ கோடி
முகங்களை விட்டு விட்டு
பாரின் எங்கோ ஒரு மூலையில்
மறைந்திருக்கும் முகங்களை
சந்திக்கவே நிந்திக்கிறது மனது......
உள்ளங்கையில் உலகம் வந்தபோது
எதிர்வீட்டு சொந்தங்கள்கூட
அண்டைகிரகவாசிகளாகிவிட்டனர் எனக்கு
ஜன்னலோர பயணத்தில்
தொலைத்த அந்த நிஜ உலகத்தை
இந்த நிழலான ஜன்னல் உலகில் தேடுகிறேன்,
தேடல்களுடன்
மீறான் அன்வர்
Monday, December 10, 2007
தொலைந்த நிஜங்களை நிழலில் தேடுகிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அன்வர், கவிதை அருமை - எளிய சொற்களைக் கொண்டு, சிந்தனையோடு படைக்கப்பட்ட அடிகள். நிஜங்கள் உண்மையில் தொலைந்து தான் போய் விட்டன. வாழ்த்துகள்
உள்ளங்கையில் உலகம் வந்தபோது
எதிர்வீட்டு சொந்தங்கள்கூட
அண்டைகிரகவாசிகளாகிவிட்டனர் எனக்கு
ஜன்னலோர பயணத்தில்
தொலைத்த அந்த நிஜ உலகத்தை
இந்த நிழலான ஜன்னல் உலகில் தேடுகிறேன்,
romba nalla iruku
//அன்வர், கவிதை அருமை //
//romba nalla iruku//
ரொம்ப நன்றி சீனா ஐயா மற்றும் நிவேதிதா
ஹம்ம்ம் இது நம்ம அன்புடன் சொந்தங்கள் பத்தின கவியோ....
அழகா உண்மைய எழுதியுருக்கலே....
Post a Comment