Tuesday, May 1, 2007

இயற்கையின் குழந்தை - கடனாநதி

கடனா நதி அனைக்கட்டு

சொர்க்கமே என்றாலும் அது எங்க ஊர போலாகுமா !



நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் கடையம் ஒன்றியத்தில் மேற்குதொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் இந்த கடனா நதி அணைக்கட்டு நெல்லைமாவட்டத்தில் பாபநாசம், காரையார், மணிமுத்தாறு அணைக்கட்டுகளுக்கு அடுத்த பெரிய அணைக்கட்டு இதுவாகும்.






அகத்திய மலைக்கும்(பாபநாசம்) குறவஞ்சி(குற்றாலம்) மலைக்கும் நடுவில் அமைந்திருக்கும் இந்த அணைக்கட்டிற்கு தோணியாறு(பனிச்சி), கல்லாறு(பாம்பாறு, நெடும்பாறை) என்ற இரு நீர்வீழ்ச்சிகள் வழியாக நீர் கிடைக்கிறது.


85 அடிகள் கொண்ட இந்த அணைக்கட்டு தற்போது பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது, ஏழு மதகுகளைக்கொண்டது. சுற்றுவட்டார விளைநிலங்களுக்கு முக்கிய நீர் ஆதரமாக இந்த அணைக்கட்டு உள்ளது. தமிழக முதல்வர் திரு மு. கருணாநிதி அவர்களால் 1969 ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.


அம்பாசமுத்திரம் - தென்காசி சாலையில் ஆழ்வார்குறிச்சியிலிருந்து உள்ளே சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. அணைக்கட்டின் அடிவாரத்தில் தொடக்கத்தில் கட்டப்பட்ட பூங்கா சீரமைப்பின்றி பொலிவின்றி இருக்கிறது. இப்பூங்கா சீரமைக்கப்படும் பட்சத்தில் சிறந்த சுற்றுலாத்தளமாக இருக்கும்.


இது வெளி அமைப்பு மட்டுமே உள்ளே அருவிகளுடன் நதிகளுடன் எடுக்கப்பட்ட நிழற்படங்களுடன் விரைவில் வருகிறேன்.

சம்பன்குளத்தான்
மீறான் அன்வர்

8 comments:

Anonymous said...

ohhhhh very cute

நாடோடி இலக்கியன் said...

"கடனா டேம்" அடுத்த விடுமுறைக்கு இங்கு செல்ல வேன்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது படங்கள்!!!
நன்றி

மீறான் அன்வர் said...

நன்றி நண்பரே ! நிச்சயமாக வருகை தாருங்கள்

நண்பன் said...

நம்ம ஊர் பக்கம் தானா மீறான். அருகே இருந்தும் தெரியாமலே போய்விட்டது. இனி அடுத்தமுறை ஊருக்கு வரும் பொழுது கண்டிப்ப்பாகப் பார்த்து விட வேண்டியது தான்.

சரி, சீசன் எப்படி? குற்றால சீசன் காலம் தானா?

நண்பன்

ஆடுமாடு said...

மீரான். ஊரைப் பார்த்த சந்தோஷம். நானும் கடனாநதி பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். பதிவுலகுக்கு வந்ததற்கு வாழ்த்துகள்.
ஆடுமாடு

மீறான் அன்வர் said...

வாங்க ஷாஜஹான் !

குற்றால சீசன் காலம்தான் என்றாலும் தோணியாற்றில்(பனிச்சி) எப்போதும் தண்ணீர் வற்றியதில்லை. கல்லாறுதான் கோடைகாலத்தில் காலை வாரிவிடும். :(

சீச்னுக்கு வந்த கண்டிப்பா ஒரு எட்டு வந்துட்டுபோங்க

மீறான் அன்வர் said...

// மீரான். ஊரைப் பார்த்த சந்தோஷம். நானும் கடனாநதி பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். பதிவுலகுக்கு வந்ததற்கு வாழ்த்துகள்.
ஆடுமாடு //

ஆமாங்க நாளைக்கே நம்ம நாடு கடத்தப்பட்டாலும் நம்மளுக்கு மலரும் நினைவுகளா இருக்கட்டுமுன்னுதான் முனைப்பா இறங்கிட்டேன். என்னதான் இருந்தாலும் நம்ம சந்தோசமா ஆடி ஓடிய மண்ணு அது ! பார்க்கும்போதெல்லாம் சந்தோசமா இருக்கும் !

வரவேற்றதற்கும் வாழ்த்தியதற்கும் நன்றிங்கண்ணா :))

cheena (சீனா) said...

மீறான் அன்வர் - படங்கள் அருமை - கடனா அணைக்கட்டு - ம்ம்ம் - ஒரு முறை வர வேண்டும் - பார்க்கிறேன்